முஸ்லீம்களின் அன்றாடப் பிரார்தனைகள்

முதல் பக்கம்
முன்னுரை

முஸ்லீம்களின் அன்றாடப் பிரார்தனைகள் எனும் நூலில் தொகுக்கப்பட்ட துஆக்களை, இனைய பயன்பாட்டாளர்களின் வசதிக்காக இந்தப் பக்கத்தில் கொடுத்துள்ளோம்.


நமதுரை!

இஸ்லாம் என்பது இயற்கை மார்க்கமாகும். இதன் விளக்கம் என்ன? நவீன யுகம் எனக் கூறிக் கொள்ளும் இன்றய காலத்தில் புதுப்புது உபகரணங்களை நாம் பார்க்கின்றோம். இவ்வனைத்து உபகரணங்களுடனும் அவற்றிற்கான ஒரு வழி காட்டி நூலையும் இனைத்தே வழங்கப்படுகின்றது. அந்த உபகரணம் உரிய விதத்தில் சிறப்பாக இயங்குவதற்கு அத்தகயோதோர் வழி காட்டி நூல் அவசியம் என்பதை அறியாதவர்கள் இல்லை. இதே போன்றுதான் இயற்க்கையையும், அதில் மனித, ஜின் வர்க்கத்தையும் படைத்த அல்லாஹ்வே இவ்விரு வர்க்கத்தினது வாழ்வும் சிறப்பாக அமைய ஒர் வழிகாட்டியையும் தந்துள்ளான். அதுதான் இஸ்லாம். எனவேதான் இஸ்லாம் இயற்க்கை மார்க்கம் எனப்படுகின்றது.

எனவே இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லீம்களின் சமுதாயம் சிறப்புடனும், மேன்மையுடனும் காணப்படவேண்டும், ஆனால் இன்று தம்மை முஸ்லீம்கள் எனக் கூறிக் கொள்ளும் மிகப் பெரியதோர் சமூகத்தில் இந்நிலை இல்லை. இது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. இதற்க்கான பதிலை நாம் தெரிந்து கொள்வதற்காக அந்த சமூகம் உண்மையாகவே இஸ்லாத்தைப் பின்பற்றக் கூடிய சமுதாயம்தானா? என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் வெறும் வாதாட்டத்தாலோ அல்லது அறபியில் பெயர் வைப்பதாலோ முஸ்லீம்கள் தோன்றுவதில்லை. இதனைத்தான் ரஸூலுல்லாஹி(ஸல்): அல்லாஹ் உள்ளங்களையும், செயல்களையும் பார்ப்பதாக கூறுகின்றார்கள். இதன்படி இஸ்லாமிய வழிமுறையை செயல்படுத்தாத ஒரு சமூகத்தை இஸ்லாமிய சமூகம் எனக்கூற முடியாது. வழிகாட்டல் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், செயல் படுத்தப்படாத வழிகாட்டலால் எவ்வாறு சிறந்த விளைவுகள் தோன்ற முடியும்?

இஸ்லாத்தை உள்ளங்களால் ஏற்று, அதனை முழுமையாக செயல்படுத்தக் கூடியதோர் சமூகத்திலேயே இஸ்லாத்தை நடைமுறைப் படுத்துவதன் சிறப்புகளைக் காண முடியும்.

மனிதன் பலவீனமானவன், எனவே அவனுக்கு பாதுகாப்பும், உதவியும் தேவைப்படுகின்றது. பெற்றுக் கொள்ளும் உதவிகளுக்கு நன்றி செலுத்தும் கடமை அவனுக்கு ஏற்படுகின்றது. கவலை, துக்கத்தின்போது அவனுக்கு ஆருதல் தேவைப்படுகின்றது. உதவி, பாதுகாப்பு, அருள், அபிவிருத்தி போன்ற அனைத்தையுமே வழங்கக் கூடிய அல்லாஹ்வை அவன் அடிக்கடி நினைவு கூறவேண்டிய தேவையும் அவனுக்கு இருக்கின்றது. இவை யாவற்றிற்குமான இஸ்லாத்தின் வழிகாட்டலே இஸ்லாம் கற்றுத்தரும் அன்றாடப் பிரார்த்தனைகளாகும். ஆனால் இஸ்லாத்தின் ஏனைய அடிப்படை அம்சங்களையே மறந்து, இப்பிரார்த்தனைகளை மாத்திரம் புரிவதால் முஸ்லீமாகிவிடவோ, சுவனம் சென்றுவிடவோ முடியாது.

நேர்வழி மறைந்து, வழிகேட்டையே மக்கள் நேர்வழி என நினைத்துள்ளதுடன், பல பிரிவுகளாகப் பிரிந்து அல்லாஹ்வுடைய தண்டனையிலேயே சிக்கியிருக்கும் மக்களைத் தூய இஸ்லாத்தை நோக்கி, சொல்லாலும் செயலாலும், ஜமா அதுல் முஸ்லிமீன் அழைத்துக் கொண்டிருக்கின்றது. இம்முயற்சியின் ஒரு பகுதியே இன் நூலாகும். இஸ்லாத்தின் இதர பகுதிகளையும் அறிந்து, அதன்படி வாழ்வதன் மூலம் வெற்றியடைந்திட ஒவ்வொரு மனிதனையும் ஜமாஅதுல் முஸ்லிமீன் அழைக்கின்றது. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் தோன்றிய மத்ஹபுகள் மூலமோ அல்லது இயக்கங்கள் மூலமோ ஒருபோதும் வெற்றி பெற்றிட முடியாது. மேலதிக விளக்கங்களுக்கு எந்த நேரத்திலும் ஜமாஅதுல் முஸ்லீமீனைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலதிக தொடர்புகளுக்கு: www.aljamaat.org www.jamaathulmuslimeen.com(Tamil)
மூல நூல் வெளியீடு: ஜமாஅதுல் முஸ்லிமீன், கல்பிட்டி வீதி, ஏத்தாலை, புத்தளம், இலங்கை. தொ.பே.இல: 032 22 68818, 032 561 1255.
Contact Us: hasansexperiment@gmail.com